Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடல்கள் மூலம் இளைஞர்களை திருத்த முடியும்! -பாடலாசிரியர் லோகன் பேட்டி

18 பிப், 2017 - 09:52 IST
எழுத்தின் அளவு:
can-change-the-students-through-songs-says-lyricist--logan

எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தில் சங்கிமங்கி, காஞ்சனா-2வில் அர்சலு அர்சலு, பிச்சைக்காரனில் பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு, கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் டி.ஆர் பாடிய முக்காத்தான், எனக்கு இன்னொரு பேரு இருக்கு படத்தில் தத்தளக்கா -என்ற பாடல் என பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் லோகன்.


தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் ஒரு மினி பேட்டி...


இப்போதைய ரசிகர்கள் எந்தமாதிரியான பாடல்களை வரவேற்கிறார்கள்?


எந்த சூழலுக்கான பாடலாக இருந்தாலும் டியூனும், பாடல் வரிகளும் சிறப்பானதாக இருக்கும்போது அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். சமீப காலமாக ஜாலியான கதையம்சம் கொண்ட படங்களே அதிகமாக வருகின்றன. அதனால் இளைஞர்களை மனதில் கொண்டு காதல் மற்றும் குத்துப்பாட்டுக்கான சூழலே அதிகமாக இடம்பெறுகின்றன. அந்த வகையில் என்னைப்பொறுத்தவரை, இளைஞர்களுக்கான பாடல் என்றால் அவர்களாக மாறி அவர்கள் என்ன நினைப்பார்களோ அதை மனதில் கொண்டு பாடல் எழுதுவேன். மெசேஜ் சொல்ல வேண்டுமென்றால் அந்த கதைச்சூழலில் சென்று எழுதுவேன். எந்தமாதிரியான சூழல் என்றாலும் அதற்கேற்ப முழு ஈடுபாட்டுடன் பாடல்கள் எழுதி வருகிறேன்.


சூப்பர் ஹிட் பாடல்கள் என்றாலும் சில மாதங்களில் காணாமல்போய் விடுகிறதே?


அழகான கான்செப்ட்டை யாரும் எடுத்து வருவதில்லை. எல்லோருமே ஜாலியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஒரு மனுசனை அந்த 3 நிமிட பாட்டில் சந்தோசப்படுத்த வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். தத்துவங்களை எதிர்பார்ப்பதில்லை. சங்கி மங்கி பாடலில் மெசேஜூம் இருக்கும், ஜாலியும் இருக்கும். இந்த பாடலில் பசங்களின் வாழ்வாதாரங்கள் இருக்கும். அந்த மாதிரி நல்ல கான்சப்ட் கொடுத்தால் அதற்கேற்ப எழுதுவேன்.


இளைஞர்களுக்கான பாடலில் ஜாலியுடன், கருத்தினையும் கலந்து எழுதலாமே?


கண்டிப்பாக எழுதலாம். இன்னைக்கு நிறைய இளைஞர்கள் தவறான போக்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மைண்டை மாற்றி சரியான பாதையில் அவர்களை செல்ல வைக்க பாடல்களால் முடியும். அந்த மாதிரி சூழல்கள் கொடுத்தால் பாடல்கள் எழுதுவேன். காதல், செண்டிமென்ட், பிரண்ட் என எந்தமாதிரியான சூழல் என்றாலும் அதை முழுமையாக பாடலில் கொண்டு வர வேண்டும். சென்னையைப்பற்றி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று சொன்னால், சென்னையைப்பற்றியும் சென்னையில் இருந்தவர்கள் இருக்கிறார்களா. இல்லை வெளியூரில் இருந்து வந்தவர்கள் இப்போது சென்னையில் உள்ளார்களா? என ஒரு விசயத்தை முழுமையாக சொல்ல வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இளைஞர்களோ, கணவன்-மனைவியோ யாராக இருந்தாலும் ஒரு பாடல் மூலம் அவர்களை மாற்ற முடியும்.


சங்க இலக்கிய வார்த்தைகளை இப்போது யாரும் எழுதுவதில்லையே?


நான் இலக்கியமாகவே பல பாடல்களை எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கும் எழுதியிருக்கிறேன். அதோடு, தோழா-26 என்ற ஒரு ஆல்பத்தில், டாக்டர் அப்துல்கலாம் கருத்திது -என்று தொடங்கும் ஒரு பாடலை, நானே கம்போஸ் செய்து எழுதியிருக்கிறேன். இதில் 26 பின்னணி பாடகர்களை பாட வைத்திருக்கிறேன். கானா பாடகர்களாலும் வெஸ்டன் டைப்பில் அழகாக பாட முடியும் என்பதை நிரூபிக்கும் பாடலாக இது அமைந்துள்ளது.


எந்தெந்த இசையமைப்பாளர்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதுகிறீர்கள்?


ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, சி.சத்யா என பலருக்கு எழுதுகிறேன். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற பெரிய இசையமைப்பாளர்களுக்கு இன்னும் எழுதவில்லை. எதிர்காலத்தில் எழுதுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.மேலும், என்னைப்பொறுத்தவரை படங்களில் டூயட், லவ் என்றில்லாமல் எல்லா சூழலிலும் பாடல்கள் வர வேண்டும். அன்பு, பாசம், அம்மா, அப்பா, நண்பன், சமூகம் என அனைத்து சூழல்களுக்கும் இயக்குனர்கள் பாடல்கள் வைக்க வேண்டும். அதற்கேற்ற கதைகளில் நிறைய படங்கள் உருவாக வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்கிறார் பாடலாசிரியர் லோகன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in