அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தில் சங்கிமங்கி, காஞ்சனா-2வில் அர்சலு அர்சலு, பிச்சைக்காரனில் பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு, கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் டி.ஆர் பாடிய முக்காத்தான், எனக்கு இன்னொரு பேரு இருக்கு படத்தில் தத்தளக்கா -என்ற பாடல் என பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் லோகன்.
தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் ஒரு மினி பேட்டி...
இப்போதைய ரசிகர்கள் எந்தமாதிரியான பாடல்களை வரவேற்கிறார்கள்?
எந்த சூழலுக்கான பாடலாக இருந்தாலும் டியூனும், பாடல் வரிகளும் சிறப்பானதாக இருக்கும்போது அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். சமீப காலமாக ஜாலியான கதையம்சம் கொண்ட படங்களே அதிகமாக வருகின்றன. அதனால் இளைஞர்களை மனதில் கொண்டு காதல் மற்றும் குத்துப்பாட்டுக்கான சூழலே அதிகமாக இடம்பெறுகின்றன. அந்த வகையில் என்னைப்பொறுத்தவரை, இளைஞர்களுக்கான பாடல் என்றால் அவர்களாக மாறி அவர்கள் என்ன நினைப்பார்களோ அதை மனதில் கொண்டு பாடல் எழுதுவேன். மெசேஜ் சொல்ல வேண்டுமென்றால் அந்த கதைச்சூழலில் சென்று எழுதுவேன். எந்தமாதிரியான சூழல் என்றாலும் அதற்கேற்ப முழு ஈடுபாட்டுடன் பாடல்கள் எழுதி வருகிறேன்.
சூப்பர் ஹிட் பாடல்கள் என்றாலும் சில மாதங்களில் காணாமல்போய் விடுகிறதே?
அழகான கான்செப்ட்டை யாரும் எடுத்து வருவதில்லை. எல்லோருமே ஜாலியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஒரு மனுசனை அந்த 3 நிமிட பாட்டில் சந்தோசப்படுத்த வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். தத்துவங்களை எதிர்பார்ப்பதில்லை. சங்கி மங்கி பாடலில் மெசேஜூம் இருக்கும், ஜாலியும் இருக்கும். இந்த பாடலில் பசங்களின் வாழ்வாதாரங்கள் இருக்கும். அந்த மாதிரி நல்ல கான்சப்ட் கொடுத்தால் அதற்கேற்ப எழுதுவேன்.
இளைஞர்களுக்கான பாடலில் ஜாலியுடன், கருத்தினையும் கலந்து எழுதலாமே?
கண்டிப்பாக எழுதலாம். இன்னைக்கு நிறைய இளைஞர்கள் தவறான போக்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மைண்டை மாற்றி சரியான பாதையில் அவர்களை செல்ல வைக்க பாடல்களால் முடியும். அந்த மாதிரி சூழல்கள் கொடுத்தால் பாடல்கள் எழுதுவேன். காதல், செண்டிமென்ட், பிரண்ட் என எந்தமாதிரியான சூழல் என்றாலும் அதை முழுமையாக பாடலில் கொண்டு வர வேண்டும். சென்னையைப்பற்றி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று சொன்னால், சென்னையைப்பற்றியும் சென்னையில் இருந்தவர்கள் இருக்கிறார்களா. இல்லை வெளியூரில் இருந்து வந்தவர்கள் இப்போது சென்னையில் உள்ளார்களா? என ஒரு விசயத்தை முழுமையாக சொல்ல வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இளைஞர்களோ, கணவன்-மனைவியோ யாராக இருந்தாலும் ஒரு பாடல் மூலம் அவர்களை மாற்ற முடியும்.
சங்க இலக்கிய வார்த்தைகளை இப்போது யாரும் எழுதுவதில்லையே?
நான் இலக்கியமாகவே பல பாடல்களை எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கும் எழுதியிருக்கிறேன். அதோடு, தோழா-26 என்ற ஒரு ஆல்பத்தில், டாக்டர் அப்துல்கலாம் கருத்திது -என்று தொடங்கும் ஒரு பாடலை, நானே கம்போஸ் செய்து எழுதியிருக்கிறேன். இதில் 26 பின்னணி பாடகர்களை பாட வைத்திருக்கிறேன். கானா பாடகர்களாலும் வெஸ்டன் டைப்பில் அழகாக பாட முடியும் என்பதை நிரூபிக்கும் பாடலாக இது அமைந்துள்ளது.
எந்தெந்த இசையமைப்பாளர்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதுகிறீர்கள்?
ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, சி.சத்யா என பலருக்கு எழுதுகிறேன். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற பெரிய இசையமைப்பாளர்களுக்கு இன்னும் எழுதவில்லை. எதிர்காலத்தில் எழுதுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.மேலும், என்னைப்பொறுத்தவரை படங்களில் டூயட், லவ் என்றில்லாமல் எல்லா சூழலிலும் பாடல்கள் வர வேண்டும். அன்பு, பாசம், அம்மா, அப்பா, நண்பன், சமூகம் என அனைத்து சூழல்களுக்கும் இயக்குனர்கள் பாடல்கள் வைக்க வேண்டும். அதற்கேற்ற கதைகளில் நிறைய படங்கள் உருவாக வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்கிறார் பாடலாசிரியர் லோகன்.