பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பரபரப்பாக நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் திரை உலகில் 10 வருடங்களை வெற்றிகரமாக கடந்துவிட்டராம். இதனை மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் தெரிவித்துள்ள காஜல் அகர்வால், லக்ஷ்மி கல்யாண் எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.
தமிழிலும் முதல் கால்பதிக்க தடுமாறிய காஜல் அகர்வாலை தெலுங்கு இயக்குனர் ராஜமௌலியின் மகதீரா திரைப்படம் முன்னணி நடிகையாக உயர்த்தியது. இப்படம் தமிழில் மாவீரன் எனும் பெயரில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
காஜல் அகர்வால் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த கைதி நம்பர் 150 திரைப்படம் பொங்கலுக்கு வெளிவந்தது. இப்படத்தைத் தொடர்ந்து ராணாவுடன் அரசியல் கதைக்களத்தில் உருவாகும் “நேனே ராஜா நேனே மந்திரி” எனும் படத்திலும் நடித்து வருகின்றார். இதே போல் தமிழில் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.