சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா 'பாகுபலி' படம்தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது.
தற்போது பாகுபலி படத்தின் முக்கிய பணியான கிராபிக்ஸ் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் எடிட்டிங்,ட ப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில் பாகுபலி-2 படத்தை ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் பாகத்தின் வெளியீட்டு தேதியில் குழப்பம் ஏற்பட்டதைப்போல் இந்தமுறை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படம் எது? அதன் கதாநாயகர்கள் யார் யார்? என இப்போதே ஆளாளுக்கு தகவல் சொல்லத் துவங்கிவிட்டனர். உண்மை நிலவரம் என்ன? அடுத்த புராஜெக்ட் பற்றி இரண்டு திட்டங்கள் வைத்திருக்கிறாராம் ராஜமௌலி.
ஒன்று, மகாபாரதம் கதையை பிரம்மாண்டமான திரைப்படமாக எடுப்பது. இப்படத்தில் மோகன்லால், அமீர்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்திய சூப்பர்ஸ்டார்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நடிக்க வைப்பது என்று திட்டமிட்டிருக்கிறாராம்.