'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
வெற்றி மாறன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட வட சென்னை படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தனுஷின் எதிரிகளுடன் கை கோர்த்தார் வெற்றிமாறன். இதன் காரணமாக வட சென்னை நிரந்தரமாக ட்ராப் பண்ணப்படவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
வட சென்னை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதும், விஐபி-2 படத்தில் நடித்து வரும் தனுஷ், இன்னொரு பக்கம் 'பவர் பாண்டி' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தனுஷ், மடோனா செபாஸ்டியன், கௌதம் மேனன், திவ்யதர்ஷினி ஆகியோர் இந்தப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் தோன்றுகிறார்களாம். அதாவது சினிமாவில் ஃபைட் மாஸ்டராக பணியாற்றும் ராஜ்கிரண் கௌதம்மேனன் இயக்கும் படத்தில் பணியாற்றுவதுபோல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பவர் பாண்டி படத்தின் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே இப்படத்தின் படப்பிடிப்பு மீதமிருப்பதாக இயக்குனர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். மார்ச் மாதத்தில் போஸ்ட் புரடக்ஷன் பணிகளை முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி பவர் பாண்டி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ்.