ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த படம் 'துருவங்கள் பதினாறு'. இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து இன்னும் சென்னையின் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தைத் தொடர்ந்து 'நரகாசுரன்' என்ற படத்தை அவர் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அர்விந்த்சாமி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். அவருக்கு மூன்று கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது மேலும் ஒரு புதிய இணைப்பாக இப்படத்தில் அர்விந்த் சாமியுடன் இணைந்து நாக சைதன்யாவும் நடிக்கவிருக்கிறார்.
சமீபத்தில் ஐதராபாத் சென்ற கார்த்திக் நரேன் அங்கே நாக சைதன்யாவை சந்தித்து அவரிடம் 'நரகாசுரன்' கதையை சொன்னாராம். ஏற்கனவே துருவங்கள் பதினாறு படத்தை பார்த்து வியந்துபோயிருந்த நாக சைதன்யா, கார்த்திக் நரேன் சொன்ன கதை வித்தியாசமான த்ரில்லர் என்பதோடு, அர்விந்த் சாமிக்கு இணையாக தனக்கும் ஸ்கோப் உள்ள படம் என்பதால் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.
தற்போது வணங்காமுடி, சதுரங்க வேட்டை 2 உட்பட 3 படங்களில் நடித்து வருகிறார் அர்விந்த்சாமி. எனவே ஜூன் மாத இறுதியில் 'நரகாசுரன்' படத்தின் படப்பிடிப்பில் அவர் இணைவதாக சொல்லி இருக்கிறார்.