'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு நடனமாடும் நடன பெண் கலைஞர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. பெரும்பாலான நடன கலைஞர்கள் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்து அந்த வாய்ப்பு கிடைக்காமல் நடன மங்கை ஆனவர்கள். வயது அதிகமாகி, அழகு குறைந்து விட்டால் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைக்காது. படத்தில் நடிக்கும் ஹீரோயினை விட நடனமங்கை அழகாக இருந்தால் அவரை ஹீரோயினுடன் முன்வரிசையில் ஆட விடமாட்டார்கள். எந்த சினிமா நடன பெண்மணியும் தன் பெண் குழந்தைகள் இந்த தொழிலுக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு நடன மங்கைகளின் வாழ்க்கை இருக்கிறது. இப்படியொரு கடினமான நடன மங்கைகளின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கி வருகிறார் நடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி ரகுராம்.
பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகளான காயத்ரி, சார்லி சாப்ளின் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு ஸ்டைல், விசில், பரசுராம், விகடன், படங்களில் நடித்தார். பின்னர் நடன இயக்குனராக மாறினார். அவ்வப்போது படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார். கடைசியாக தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். இப்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
"கவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாது மறைந்திருக்கும், உலகம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை. இதன் அழுகுரல் உலகத்தால் கட்டாயம் கேட்கப்பட வேண்டும். ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மைய கதையாக கொண்ட படம் தான் யாதுமாகி நின்றாள். பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன்.
சாதாரண பின்னனி நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படம். குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதாரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாகும்.
இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது யாதுமாகி நின்றாள். இது நம்பிக்கையின் கதை, இளம்பெண்ணின் கதை, மனதால் உணரப்பட வேண்டிய இக்கதை நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்கிறார் காயத்ரி ரகுராம்.