‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பர்மாவில் கலவரம் வெடித்தபோது அங்கிருந்து லட்சக்கணக்கான பேர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அவர்களில் நடிகை எஸ்.என்.பார்வதியும் ஒருவர். அவரது குடும்பம் பர்மாவில் வைர வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தது. கலவரத்தால் உயிர் பிழைத்தால் போதும் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு வந்தது எஸ்.என்.பார்வதி குடும்பம்.
அப்போது கையில் கொண்டு வந்திருந்த கொஞ்சம் வைரத்தை கொண்டு சென்னையில் வைர வியாபாரத்தை தொடங்கினார் எஸ்.என்.பார்வதியின் தந்தை. ஆனால் அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. அப்பா, அம்மா, இரண்டு தங்கை, ஒரு தம்பி. அடுத்த வேளை உணவுக்கே சிக்கலான வாழ்க்கை.
எஸ்.என்.பார்வதியின் பக்கத்து வீட்டுக்காரர் சண்முகம், மேடை கச்சேரிகளில் பாடுகிறவர். அவர் இவர்களது வறுமையை கண்டு "பார்வதி அழகாக இருக்கிறாள். நாடகத்தில் நடிக்க என் நண்பருக்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள் உங்கள் மகள் நடிக்க சம்மதித்தால் பணம் கிடைக்கும் உங்கள் கஷ்டம் தீரும்" என்றார். எஸ்.என்.பார்வதி நடிப்பதில் குடும்பத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை. என்றாலும் வறுமை அவரை நடிக்க வைத்தது. நிஜமான வைர நகைகள் போட்டு வலம் வந்த எஸ்.என்.பார்வதி கவரிங் நகைகள் போட்டு நடிக்க ஆரம்பித்தார்.
தீர்ப்பு கூறுங்கள் என்ற நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த எஸ்.என்.பார்வதி பிறகு பணம் தரும் பரிசு என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு நூற்றுக் கணக்கான படங்களில் காமெடி நடிகையாகவும் குணசித்ர நடிகையாகவும் நடித்தார். மகள் நடிகையானதை தாங்கிக் கொள்ள முடியாமலேயே அவரது தந்தை இறந்து போனார்.