பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் லிங்குசாமியும், விஷாலும் மீண்டும் இணையும் 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவிருப்பதாக சொல்லப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின்படி, 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம். காரணம்... மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னொரு காரணம், கதாநாயகி பிரச்சனை.
'சண்டக்கோழி-2' படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கவிருக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. அவர் கேட்ட சம்பளம் அதிகம் என்று விஷால் ஃபீல் பண்ணி இருக்கிறார். எனவே மஞ்சிமாவை மறந்துவிட்டு, கீர்த்தி சுரேஷ் பக்கம்போனார்கள். அதன் பின்னர் 'சண்டைக்கோழி-2'வில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. இதை இரண்டு தரப்பினரும் உறுதி செய்தனர்.
இந்நிலையில் இப்போது திடீர் மாற்றம். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவலின் படி 'சண்டைக்கோழி-2'வில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லையாம். விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்த பிறகு சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வரும் கீர்த்திசுரேஷ் என்ன காரணத்தினாலோ ஏதோதோ காரணங்களை சொல்லி வருகிறாராம்.
முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மினை போன்று ஹோம்லியான முகம் தேவைப்படுவதால், கீர்த்தி சுரேஷ் அதற்கு பொருத்தமானவர் என்று அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். இப்போது அதே முகத்தோற்றம் உடைய புதிய நாயகியை தேடி வருகிறார்கள்.