ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
'அரண்மனை' 2 ஆம் பாகத்தை இயக்கி, அதில் முக்கிய வேடத்தில் நடித்த சுந்தர்.சி, அதன்பிறகு எந்தப் படத்தையும் இயக்கவில்லை. இடைப்பட்டகாலத்தில் 'முத்தின கத்திரிகா' என்ற படத்தை தயாரித்து அப்படத்தில் கதாநாயகனாக மட்டும் நடித்தார். முத்தின கத்திரிகா மிகப்பெரிய தோல்வியடைந்தது. தற்போது 'நந்தினி' என்ற மெகாத் தொடரை தயாரித்து வருகிறார்.
இன்னொரு பக்கம், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் 'சங்கமித்ரா' படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாகக் கூறப்படும் இந்த வரலாற்றுப் படத்தில் முதலில் சூர்யா, மகேஷ்பாபு இணைந்து நடிப்பதாக சொல்லப்பட்டது. கதையைக் கேட்ட சூர்யா நடிக்க மறுத்துவிட்டார். அவர் நடிக்க மறுத்ததால் மகேஷ்பாபுவும் கழன்று கொண்டுவிட்டார். அதன் பிறகு சங்கமித்ரா படத்தில் ஹீரோக்களாக ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் என அறிவித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பான 'சங்கமித்ரா' என்ற டைட்டில் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஃபேன்டஸி படமான 'புலி'யிலும் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ஏற்கனவே நடித்துள்ளார்.
இதற்கிடையில் மேற்கண்ட தகவலுக்கு நேர்மாறாக சங்கமித்ரா படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டதாகவும் ஒரு தகவல் வெளி வருகிறது. எதைத்தான் நம்புறதுன்னு தெரியலையே?