துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தற்போது அமல் நீரத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சி.ஐ.ஏ' படத்தில் நடித்துமுடித்துவிட்ட துல்கர் அடுத்ததாக நடிக்கும் படம் தான் 'பறவ' (பறவை).. இந்தப்படத்தை இயக்குகிறார் காமெடி நடிகரும் துல்கரின் நண்பருமான சௌபின் ஷாகீர்.. 'பிரேமம்' படம் பார்த்தவர்களுக்கு அதில் சாய்பல்லவியை ஒருதலையாக காதலிக்கும் கல்லூரி பேராசிரியரின் காதலுக்கு உதவுதற்காக, அவர் செலவிலேயே அவ்வப்போது சாப்பாட்டை புல் கட்டு கட்டும் பிடி மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த சௌபின் ஷாகீரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
ஆனால் அடிப்படையில் இவர் டைரக்சன் டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவர். பாசில், சித்திக், ரபி மெக்கார்டின், அமல் நீரத் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த இவரை 'பிரேமம்' படம் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவே, முழு நேர நடிகராக மாறி, துல்கர் சல்மானுடன் இணைந்து தொடர்ந்து நான்கு படங்களில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். இருந்தாலும், தனது டைரக்சன் கனவை மட்டும் அவர் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
'பிரேமம்' படத்தில் நடித்தபோதே அதன் தயாரிப்பாளரான பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத்திடமும் அதன்பின் துல்கரிடமும் கதை சொல்லி வைத்திருந்தார் சௌபின் ஷாகீர். இதோ இப்போது துல்கரின் தேதிகள் பிரீயாகி விடவே, தனது நடிப்பு வேலைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு 'பறவ' டைரக்சனில் இறங்கிவிட்டார் சௌபின் ஷாகீர். இந்தப்படத்திற்காக தனது தோற்றத்தை கொஞ்சம் வித்தியாசமாக மாற்றியுள்ளாராம் துல்கர் சல்மான்.