பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
நடிகை தன்ஷிகாவுக்கு கபாலியில் ரஜினியின் மகளாக நடித்த பிறகு பட வாய்ப்புகள் குவிகிறது. தற்போது அவர் விழித்திரு, காத்தாடி, களக்கூத்து, ராணி, உரு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் வெளிவர இருப்பது ராணி. மலேசியாவில் நடக்கிற கதை. அங்கு காணாமல் போன தன் கணவனை தேடி கண்டுபிடிக்கும் வீரமான பெண்ணாக நடிக்கிறார். விழித்திரு படத்தில் விதார்த் ஜோடியாகவும், உரு படத்தில் கலையரசன் ஜோடியாகவும் நடிக்கிறார்.
இவைகள் தவிர தற்போது தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இயக்குனர் கவுதம் மேனனிடம் உதவியாளராக இருந்த ரமணா என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதுவும் ராணி படம் போன்று ஹீரோயின் சப்ஜெக்ட் கதை. தன்ஷிகாவுக்கு தெலுங்கு நன்றாக பேசத் தெரியும் என்பதால் அங்கும் ஒரு நிலையான இடத்தை பிடிப்பார் என்கிறார்கள்.