Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50வது நாளில் துருவங்கள் பதினாறு: கற்றுத் தருவது என்ன?

16 பிப், 2017 - 15:39 IST
எழுத்தின் அளவு:
dhuruvangal-pathinaaru-movie-completed-50-days

22 வயதே ஆன ஊட்டி இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள துருவங்கள் பதினாறு படம் இன்று 50 வது நாளை தொட்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் உண்மையான வெற்றி இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது. படத்தில் நடித்தவர்களில் ரகுமான் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். அதே போல இசை அமைப்பாளர் ஜாக்ஸ் பிஜே, ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் அனைவரும் புதுமுகங்களே.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. சில ஆண்டுகள் தயாரிப்பாளர் தேடி அலைந்துவிட்டு கிடைக்காததால் நண்பர்களின் உதவியுடன் தானே தயாரிப்பாளர் ஆனார் கார்த்திக் நரேன். அவரிடம் கதை கேட்க கூட எந்த ஹீரோவும் தயாராக இல்லை. அதற்கு அவர் வயது ஒரு காரணம். மற்றொன்று அவர் எந்த இயக்குனரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர். படம் இல்லாமல் இருந்த பார்த்திபன் கூட இந்தப் படத்தை நிராகரித்திருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இப்போது படம் வெற்றி பெற்றிருக்கிறது.


துருவங்கள் பதினாறு வெற்றி சில உண்மைகளை சொல்லுகிறது. சிறிய படங்கள் ஓடுவதில்லை. தியேட்டர் கிடைப்பதில்லை. மக்கள் பார்க்க வருவதில்லை என்கிற பொதுவான குற்றச்சாட்டுகளை படம் உடைத்திருக்கிறது. துருவங்கள் பதினாறு தியேட்டரில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்கிற மாதிரியான பிரமாண்டங்களை கொண்டதில்லை. ஆனாலும் மக்கள் தியேட்டருக்கு வந்தார்கள். ரகுமான் நடித்திருக்கிறார் என்பதற்காக யாரும் படம் பார்க்க வருவதில்லை. ஆனால் இதில் ரகுமான் மட்டுமே நடித்திருக்கிறார் என்று தெரிந்தும் வந்தார்கள். காரணம் படத்தின் கதையும். கதை சொன்ன விதமும்.


படம் நன்றாக இருந்தால் எந்த தடையும் ஒரு படத்திற்கு இல்லை என்பதுதான் துருவங்கள் பதினாறு சொல்லும் உண்மை. அதோடு இன்னொரு உண்மையும் உண்டு. இதே படத்தை கார்த்திக் நரேன் எந்த ஆரவாரமும் இல்லாமல் சாதாணரமாக வெளியிட்டிருந்தால் பத்தோடு பதினொன்றாகியிருக்கும். மக்கள் கவனத்திற்கு படம் வராமலேயே போயிருக்கும். படத்தின் மவுத் டாக் வருவதற்குள் படத்தை தியேட்டரில் இருந்து எடுத்திருப்பார்கள்.


ஆனால் படத்தை ட்ரீம் பேக்டரி, வீனஸ் இன்போடெயின்மெண்ட் என்ற நிறுவனங்கள் வாங்கியது. படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களிடம் கொண்டு சென்றார்கள். பிரபல இயக்குனர்களை படம் பார்க்க வைத்து அவர்களின் கருத்துக்களை விளம்பரமாக பயன்படுத்தினார்கள். அதுவும் வெற்றிக்கு காரணமாக இருந்தது. நல்ல கதை, அதை சொல்லும் நல்ல திரைக்கதை, எடுத்த படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பரயுக்தி இந்த மூன்றும்தான் இன்றைய சினிமாவுக்கு முக்கியம் என சொல்லியிருக்கிறது துருவங்கள் பதினாறு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in