ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எல்லா மனிதர்களும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சிம்பு. அவரைப் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் சிம்பு சிறந்த மனிதாபிமானி என்பது பலர் அறிந்திராத ஒன்று. தான் செய்யும் உதவிகளை அவர் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. சமீபத்தில் உதவி பெற்ற ஒருவர் அவரே வெளியிட்டதால் இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு சிம்பு கெட்டவன் என்ற பெயரில் ஒரு படத்தில் நடித்தார். பரதன் பிலிம்ஸ் சார்பில் திருச்சி ஆர்.விஸ்வாதன் என்பவர் தயாரித்தார். சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்தார். ஜி.டி.நந்து இயக்கினார். 20 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் சிம்புக்கும், இயக்குனர் நந்துவுக்கும் இடையே வந்த கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் நந்து படத்தை விட்டு வெளியேறினார். தயாரிப்பாளரும் படத்தை டிராப் பண்ணிவிட்டார். அந்த நேரத்தில் இயக்குனர் நந்து சிம்புவை கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்தார்.
அந்த நந்துவின் குடும்பத்தைதான் சிம்பு இப்போது காப்பாற்றி இருக்கிறார். கெட்டவன் படத்திற்கு பிறகு நந்துவுக்கு வேறு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வருமானமின்றி மனைவி குழந்தையுடன் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் நந்துவின் மனைவி ஏஞ்சல் கர்ப்பம் ஆனார். குழந்தை பெறுதில் சிக்கல் உருவாக தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். சில வாரம் மருத்துவனையில் தங்கி சிகிச்சை பெற்றதில் பல லட்சம் பில் ஆகியிருக்கிறது. அதை கட்டுகிற வசதி நந்துவுக்கு இல்லை. பில்லை கட்டினால்தான் டிஸ்சார்ஜ் செய்வோம் என்று மருத்துவமனை கூறிவிட்டது.
இந்த நிலையில் ஒரு செய்தி சேனலில் சிம்பு நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பற்றி நந்துவை அழைத்தது. அங்கு சென்றால் ஒரு குறிப்பிட்ட தொகை பேட்டாவாக கிடைக்கும் என்பதால் சேனலுக்கு சென்ற நந்து, சிம்பு நடத்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்ததோடு சிம்பு மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து பேசி திரும்பியிருக்கிறார். இதை டி.வியில் பார்த்த சிம்பு நந்துவை வரவழைத்து பேசினார். அப்போதுதான் தன் நிலையை நந்து சொல்ல அடுத்த நிமிடமே மருத்துவமனை பில்லை செட்டில் பண்ணிவிட்டார் சிம்பு.