பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முன்னாபாய் எம்பிபிஎஸ்., உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் அர்ஷத் வர்சி. தனது அசாத்தியமான நடிப்பு மற்றும் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த அர்ஷத், தற்போது இரடா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்தவாரம் வெளியாக உள்ள நிலையில் இதில் நடித்த அனுபவம் பற்றி அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...
இரடா படம் பற்றி சொல்லுங்க...?
இது ஒரு சமூக விஷயத்தை சொல்கிற படமாக இருக்கும், மக்கள் அதை புரிந்து கொள்வார்கள். மிகவும் ஒரு சீரியஸான விஷயத்தை சொல்கிற படம். சீரியஸான படம் என்பதற்காக மட்டும் நடிக்கவில்லை, அதில் நல்ல கதையும், அபர்ணா சிங்கின் இயக்கம் மற்றும் வசனங்களும் சிறப்பாக இருந்ததால் நடித்தேன். மேலும் படத்தில் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தையும் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள்.
எந்த மாதிரி படங்களை தேர்வு செய்கிறீர்கள்.?
படத்தின் கேரக்டர் என்னை கவர்ந்தால் நடிப்பேன். அதோடு படத்தின் கதையையும் கவனிப்பேன். கதை நன்றாக இருக்கணும், எனக்கான நடிப்பு எந்தமாதிரி இருக்கும் என பார்க்கமாட்டேன். ஆக்ஷ்ன் படங்களில் நடிக்க எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ரொமான்ஸ் கதையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த கதையாக இருந்தாலும் நடிக்க தயாராக உள்ளேன்.
இயக்குநர் அபர்ணா சிங் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்க.?
என் சினிமா கேரியரில் முதன்முறையாக ஒரு பெண் இயக்குநருடன் பணியாற்றி உள்ளேன். நல்ல அனுபவமாக இருந்தது. ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும், ஒரு நடிகரிடமிருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார், திறமையான இயக்குநர் அபர்ணா.
நஸ்ருதின் ஷா உடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?
தலைசிறந்த நடிகர் நஸ்ருதின். கதையை தாண்டி இப்படத்தில் நடிக்க மற்றொரு முக்கிய காரணம் நஸ்ருதின் ஷா. அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். மிகவும் உத்வேகமாக நடிகர், அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். சகநடிகர்களுக்கு மரியாதையும், படத்தில் அதிக காட்சிகளும் வர வேண்டும் என்று விரும்புவர்.
கோல்மால் அகைன் படத்தில் நடிக்கிறீர்களா...?
நானும் நடிக்கிறேன், மார்ச் மாதம் முதல் படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருக்கிறது. பொதுவாக படங்களின் படப்பிடிப்பு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிந்துவிடும். ஆனால், கோல்மால் அகைன் படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட இருப்பதால் செப்டம்பர் மாதம் முடியும். கோல்மால் அகைன் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன்.
சஞ்சய் தத் ரோலில் ரன்பீர் நடிப்பது பற்றி உங்கள் கருத்து.?
ரன்பீர் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. நல்ல திறமையான நடிகர், படத்தில் அவரது தோற்றம் தொடர்பான போட்டோவை பார்த்தேன், அருமையாக இருந்தது. சஞ்சய் தத் மாதிரியே இருந்தார். அவரது ரோலுக்கு ரன்பீர் சரியான தேர்வு.