ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி மற்றும் பலர் நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' படம் கடந்த வாரம் 9ம் தேதியன்று வெளியானது. பட வெளியீட்டிற்கு முன்பே படத்தின் வியாபாரம் 100 கோடியைத் தாண்டியதாக படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா அறிவித்தார். ரஜினிகாந்திற்குப் பிறகு தமிழில் அதிக வியாபாரம் கொண்ட நடிகர் சூர்யா மட்டுமே என்றார். திரையுலக வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தத் தகவலை தயாரிப்பாளரே அறிவித்தால் மற்றவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இப்போது 'சி 3' படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். “சாதாரணமாக வியாழக்கிழமையில் வெளியான 'சி 3' படம் 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது,” எனப் பதிவிட்டுள்ளார்கள். முன்னதாக படத்தின் வெற்றிக்காக படத்தின் இயக்குனருக்கு சூர்யா, கார் ஒன்றைப் பரிசளித்தார் என்றும் செய்தியை அனுப்பியிருந்தார்கள்.
'சி 3' படம் வெளியான நாளிலிருந்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவில்லை என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கிலும் அதிக விலைக்கு விற்கப்பட்ட இந்தப் படம் சுமார் 15 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றே டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 'சி 3' படத்தின் வசூல் 6 நாட்களில் எப்படி 100 கோடி வசூலித்தது என்பதை துரைசிங்கம் தெளிவுபடுத்துவாரா ?....