தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் அதிகப்படியான படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களின் கையை கடிப்பதில்லை. எப்படியேனும் போட்ட பணம் கைக்கு வந்து விடுகிறது. அதனால், விஜய்சேதுபதி படங்களை நம்பி வாங்கலாம் என்று விநியோகஸ்தர்கள் முட்டி மோதுகிறார்கள். மேலும், இந்த சந்தர்ப் பத்தை விஜய்சேதுபதியும் நன்றாக பயன்படுத்திக்கொண்டு வருகிறார். அதாவது, எந்த படத்தையும் இழுத்தடிக்காமல் திட்டமிட்டு முடித்துக்கொடுத்து வருகிறார்.
அந்தவகையில், அவர் ஒரு படத்திற்கு மொத்தம் 40 நாட்கள் கால்சீட் கொடுக்கிறார். அந்த நாட்களில் மொத்த படத்தையும் முடித்து விட வேண்டும் என்றும் டைரக்டர்களை கேட்டுக்கொள்ளும் விஜய்சேதுபதி, ஒவ்வொரு படத்தை முடித்ததும் ஒருவாரம் ஓய்வு எடுக்கிறார். தனது மனைவி, பிள்ளைகளுடன் ஏதேனும் ஒரு பிடித்தமான இடங்களுக்கு சென்று விட்டு திரும்புகிறார். அதையடுத்து வந்த வேகத்திலேயே அடுத்த படத்தில் முழுவேகத்தில் இறங்கி விடுகிறார்.
மேலும், தன்னை புக் பண்ணும் தயாரிப்பாளர்களிடம், என் கால்சீட்டை வீணடித்து விடாதீர்கள். அப்படி நீங்கள் வீணடித்தால் உங்களுக்கு கொடுத்த கால்சீட் முடிந்ததும் நான் வேறு படத்தில் நடிக்கத்தொடங்கி விடுவேன். அதன்பிறகு என்னிடம் மீண்டும் கால்சீட் கேட்டு தொல்லை பண்ணக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறார் விஜய்சேதுபதி.