ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த கைதி எண் 150 படத்தில் நடிக்க காஜல்அகர்வாலுக்கு அப்படத்தின் தயாரிப்பாளரும், சிரஞ்சீவியின் மகனுமான நடிகர் ராம் சரண் தேஜா அழைப்பு விடுத்தபோது, சீனியர் நடிகருடன் நடித்தால் அடுத்தப்படியாக இளவட்ட நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகள் கிடைக்காதே என்று ரொம்பவே பீல் பண்ணி இரண்டு மனதாகத்தான் அந்த படத்தில் நடித்தார். ஆனால், இப்போது பார்த்தால் சிரஞ்சீவி படத்திற்கு பிறகுதான் ராணாவுடன் நேனே ராஜூ நேனே மந்திரி, ஜூனியர் என்டிஆருடன் லவகுச ஆகிய படங்களில் நடிப்பவர் மேலும் சில புதிய படங்களில் நடிக்கவும் கதை கேட்டிருக்கிறார்.
மேலும், தற்போது தமிழில் அஜித்தின் விவேகம், விஜய்யின் 61வது படம் என நடித்து வரும் காஜல்அகர்வால், அடுத்தபடியாக தெலுங்கில் மார்க்கெட்டை இன்னும் ஸ்டெடி பண்ணும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். காரணம், தெலுங்கில் முன்னணி நடிகை பட்டியலில் இருந்த சமந்தா திருமணத்திற்கு தயாராகி விட்டதோடு, ராகுல்ப்ரீத்சிங் தற்போது தமிழில் என்ட்ரி கொடுத்திருப்பதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் தெலுங்கில் புதிய கதைகளை கேட்டு வரும் காஜல்அகர்வால், அடிக்கடி மும்பைக்கு பறப்பதை நிறுத்திவிட்டு ஐதராபாத்தில் நிரந்தரமாக முகாமிட்டுள்ளாராம்.