பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுஷ் முதன் முறையாக இயக்கி வரும் 'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்களில் முடிவடைய உள்ளது. படத்தின் மற்ற இறுதிக் கட்டப் பணிகளும் உடனுக்குடன் நடந்து வருகிறது. படத்தை ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 'ஜோக்கர்' படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 7ம் தேதியன்று சென்னையில் ஆரம்பமானது. தன்னுடைய நடிப்பு வேலைகளுக்கு இடையிலும், இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தி 'பவர் பாண்டி'யை முடிக்கப் போகிறார்.
தனுஷ், தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா, வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'வட சென்னை' படத்தில் ஆரம்பித்து அப்படியே நிறுத்திவிட்டார்.
'எனை நோக்கி பாயும் தோட்டா' எப்போது வெளிவரும் என்று தெரியாத சூழ்நிலையில், அவர் இயக்கியுள்ள 'பவர் பாண்டி' படம் ஏப்ரல் மாதம் வெளிவருவது அவருடைய ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம்.