இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழல் அனைவருக்கும் தெரிந்தது தான். நாடே தமிழகத்தை நோக்கி தான் திரும்பியிருக்கிறது. அந்தளவுக்கு தினம் தினம் ஒரு பரபரப்பு நிலவுகிறது. அதிலும் நேற்று சொத்து குவிப்பு வழக்கில் சசிலாவிற்கு என்ன தீர்ப்பு கிடைக்கபோகிறது என்று எதிர்பார்ப்பு எகிறி கிடந்த நிலையில் தர்மம் எப்போதும் வெல்லும் என்பதை நிரூபிக்கும் வகையில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர், சட்ட வல்லுநர்கள், திரைப்பிரபலங்கள், சாதாரண பொதுமக்கள் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
நடிகர் கமலும் இதுதொடர்பாக நேற்று, ‛‛பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்'' என்று டுவிட்டரில் கூறியிருந்தார்.
இந்நிலையில் கமல் இன்று(பிப்., 15-ம் தேதி) ஒரு டுவீட் செய்துள்ளார். ஆனால் அது வழக்கம் போல் பலருக்கும் புரியவில்லை. அவர் கூறியது இது தான்...
‛‛திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம்
துரத்தையிலே
குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வோணடும்
நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருந்தது? என்றால்
ஜனமாவது நாயகமாவது''
இது அனைவருக்கும் புரியாததால், புரியும் தமிழில் பிழையின்றி என்று மற்றொரு டுவீட் செய்தார். ஆனால் அது இன்னும் புரியவில்லை. அது இது தான்....
‛‛திருடனு கூவிகினு ஜனம்
தெர்திச்சுன்னா
அவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா? நின்னு நிதானமா
ங்கொம்மால கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ
ஜனமா நாயகமா?''
இருந்தாலும் கமல் சொல்லியிருப்பது தான் அர்த்தம் இது தான்... ‛‛திருடன் என்று மக்கள் கூட்டம் துரத்துகிற போது, திருடன் தெறித்து ஓடவல்லவா வேண்டும்'', ஆனால் நின்று நிதானமாய் யாரோ கூப்பிட்டது போன்று உள்ளது என் அவன் கேட்டால் எப்படி?''.
கமல் எதற்கு இப்படி சொல்கிறார் என்றால் சசிகலா குற்றவாளி என கூறி கோர்ட்டில் ஆஜராக சொல்லி உத்தரவாகிவிட்டது. ஆனால் அவர் நின்று நிதானமாய் சாவகாசமாய் சரண் அடைய பெங்களூரு சென்றார். ஒரு குற்றவாளி பதற்றம் இல்லாமல் சாவகாசமாக ஜெயிலுக்கு செல்வதை தான் கமல் குறிப்பிடுகிறாரோ என அவர் ரசிகர்கள் கூறுகின்றனர்.
அடேங்கப்பா...!