பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இருக்கும் படம் கோம்பே. ஹிரோவாக சார்லஸ், ஹிரோயினாக தீர்த்தா நடித்திருக்கிறார்கள். கதை ,ஒளிப்பதிவு ,எடிட்டிங், ஆகிய பணிகளுடன் இந்தப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாபிஸ் இஸ்மாயில், வில்லனாகவும் நடித்துள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் மூன்று படங்களை இயக்கியிருக்கிறார், புதுமுகம் அனூப் ராக்வெல். அபிஜித் ஜான்சன்.டென்னிஸ்ஜோசப் ஆகிய மூவரும் இசையமைத்திருக்கிறார்கள்.
இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் படம் பற்றி இயக்குனர் ஹாபிப் இஸ்மாயில் கூறியதாவது: ‛‛தேங்காயில் இருந்து தேங்காயையும் நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். மனித வாழ்க்கையையும் அப்படித்தான் இருக்கிறது. மனித உடலில் உயிர் இல்லை எனில் அதற்கு எந்த மரியாதையையும் இல்லை இது தான் இந்தப் படத்தின் அடி நாதம். தேனியில் வாழும் ஒரு இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன், அவனது வாழ்க்கையை சொல்கிற படம்தான் "கோம்பே" .
காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. அவள் அவன் வாழ்வை மாற்ற முயல்கிறாள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்தப்படம். கதை 4 நாட்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர் ஹாபிப் இஸ்மாயில்.