தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காமெடியன் சூரிக்கு திருப்புமுனை தந்த படம் என்றால் அது சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழுதான். அந்த படத்தில் அவர் நடித்த புரோட்டா காமெடிதான் சூரியை சினிமா உலகிற்கு பெரிய அளவில் அடையாளப்படுத்தி அவருக்கு பிரேக்காக அமைந்தது. அதிலிருந்து இப்போது வரை அவர் புரோட்டா சூரி என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறார். அதன்பிறகு சுசீந்திரன் இயக்கும் பல படங்களில் இடம்பெற்ற அவர், சுசீந்திரனிடம் மட்டும் கதையே கேட்பதில்லை. அவர் சொன்னால் போதும் ஸ்பாட்டில் போய் நின்று விடுவார்.
அப்படித்தான் மாவீரன் கிட்டு படத்திலும் நடித்தார். ஆனால், வழக்கம்போல் சூரியை காமெடிக்கு பயன்படுத்தியிருப்பார் என்று பார்த்தால் ஒரு கேரக்டருக்கு பயன்படுத்தியிருந்தார் சுசீந்திரன். அது சூரிக்கு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் அந்த கேரக்டர் பெரிதாக ரீச்சாகவில்லை.
இந்த நிலையில், தற்போது சுசீந்திரனின் மூலக்கதையில் வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தை இயக்கி வரும் செல்வசேகரன், இந்த படத்திலும் சூரிக்கு முக்கிய வேடம் கொடுத்திருக்கிறார். ஆனால், வெண்ணிலா கபடிக்குழுவில் புரோட்டா கடைக்கு சென்று 50 புரோட்டா சாப்பிட்ட சூரி, இந்த படத்தில் புரோட்டா கடைக்காரராகவே நடிக்கிறாராம். அந்த கடைக்குள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பல புரோட்டா காமெடி காட்சிகள் உள்ளதாம். அதனால் வெண்ணிலா கபடிக்குழு-2 படம் தன்னை இன்னும் பெரிய அளவில் எடுத்து செல்லும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறாராம் சூரி.