'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சாந்தனுவுக்கு ஜோடியாக சிருஷ்டிடான்கே நடித்துள்ள படம் முப்பரிமாணம். மார்ச்-3ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தை பாலாவிடத்தில் உதவியாளராக பணியாற்றிய அதிரூபன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பிரஸ்மீட்டில் டைரக்டர் அதிரூபன் குறித்து பல புகார்களை அடுக்கினார் சிருஷ்டிடான்கே.
அவர் பேசும்போது, தினமும் காலையில் ஸ்பாட்டிற்குள் சென்றதும், டைரக்டர் அதிரூபனிடம் குட்மார்னிங் சொன்னால் பதிலுக்கு அவரும் சொல்வார். உடனே டிபன் சாப்பிட்டாச்சா என்று கேட்பார். அடுத்து சீக்கிரம் ரெடியாகி ஸ்பாட்டுக்கு வாங்க என்பார். அதை சிரித்தபடிகூட சொல்ல மாட்டார். அதோடு, செட்டில் யாரும் போன் பேசக்கூடாது. ஜோக் அடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டி ருந்தார். இதனால் ஸ்பாட்டில் ஜாலியாகவே இருக்க முடியவில்லை.
நானும், சாந்தனுவும் ஏதாவது பேசிக்கொண்டிருந்தால்கூட என்ன பேசுறீங்க? என்று வேகமாக வந்து கேட்பார். சீனைப்பற்றிதான் பேசுறோம் சார் என்ற சொன்ன பிறகு அப்படியா தேங்கஸ் என்றபடி செல்வார். எப்பவாவது அம்மாவிடம் போன் பேசினால்கூட, யாருகிட்ட பேசுறீங்க? என்பார். அம்மாகிட்ட பேசுறேன் என்று சொன்னதும் ஓகே ஓகே சீக்கிரம் பேசி முடிங்க என்பதோடு, பேசுவதையே பார்த்துக்கொண்டிருப்பார். பிறகு எப்படி அம்மாவிடம் பேச முடி யும். இப்படிதான் படப்பிடிப்பு நடக்கிற ஒவ்வொரு நாளும் இருந்தார். அதற்கு காரணமாக, ஸ்பாட்டில் அனைவருமே நடிக்கிற கேரக்டர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் படம் நான் நினைத்தபடி வரும் என்று சொல்வார்.
அதேமாதிரி படத்தோட கேமராமேன் ராசாமதி, ஆரம்பத்தில் நன்றாக டிரஸ் பண்ணி கிளீன்மேனாக வந்தார். போகப்போக அவரது தோற்றம் மாறி விட்டது. அவரிடம் பேசலாம் என்று போனால், அவரது முகம் பாவமாக இருக்கும். ஆரம்பத்தில் ஷூ போட்டிருந்தவர் பின்னர் சப்பல் போட்டிருந்தார். அவரது சட்டையில் இரண்டு பட்டனை காணவில்லை. தாடி வளர்த்திருந்தார். அவருக்கும் நம்மளை மாதிரி கஷ்டம் என்பதை புரிந்து கொண்டேன்.
நான் சொல்வது எல்லாமே உண்மை. ஆனாலும், படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான் டைரக்டர் அப்படி எங்களை அக்கம் பக்கம் அசையவிடாமல் செய்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்று சொன்ன சிருஷ்டிடான்கே, இறுதியில் டைரக்டர் அதிரூபன் ஒரு ஸ்வீட் பர்ஷன் என்று சொல்லி அவருக்கு ஒரு ஐஸ் வைத்தபடி தனது பேச்சை முடித்துக்கொண்டார்.