ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற படத்தை தன்னுடைய மேனேஜர் சதீஷ் பெயரில் தயாரித்து வருகிறார் நடிகர் பாபி சிம்ஹா. அந்தப் படத்தின் நிர்வாகத்தயாரிப்பாளரான செந்தில்குமரன் என்பவருக்கு திருட்டுப்பட்டம் கட்டி அவரை சிறையில் தள்ள முயற்சி செய்திருக்கிறார் பாபி சிம்ஹா. இந்த விவகாரம் தற்போது படத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜிகிர்தண்டா, இறைவி போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக செந்தில்குமரன் பணியாற்றியபோது பாபி சிம்ஹாவுக்கு நண்பராகி இருக்கிறார். வல்லவனுக்கும் வல்லவன் படத்தை தயாரிக்க திட்டமிட்டபோது செந்தில்குமரனை படத்தின் எக்சிக்யூட்டிவ் புரட்யூசராக பயன்படுத்திக் கொண்டார் பாபி சிம்ஹா. வல்லவனுக்கும் வல்லவன் படப்பிடிப்புக்கு பணம் தேவைப்படுப்போதெல்லாம் தன் மனைவியின் நகைகளை அடகு வைத்தும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் சுமார் பத்து லட்சத்துக்கு மேல் பாபிசிம்ஹாவுக்கு கொடுத்திருக்கிறார் செந்தில்குமரன்.
வாங்கிய பணத்தை பாபி சிம்ஹா திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார் செந்தில்குமரன். அதனால் கடுப்பான பாபிசிம்ஹா, இந்த நிமிடமே நீ படத்திலிருந்து விலகிக்கொள். படத்தில் வொர்க் பண்ணியதற்கும், கடனாக வாங்கியதற்கும் சேர்த்து 20 லட்ச ரூபாய்க்கு செக் தருகிறேன்.” என்று 20 லட்ச ரூபாய்க்கு காசோலை கொடுத்திருக்கிறார். கணக்கில் பணமில்லை என்று பாபி சிம்ஹா கொடுத்த செக் திரும்பி வர, அதிர்ச்சியான செந்தில்குமரன் பாபிசிம்ஹாவுக்கு போன் செய்து பணம் கேட்டிருக்கிறார்.
கடுப்பான பாபி சிம்ஹா, தன்னுடைய கம்பெனியிலிருந்து செந்தில்குமரன் செக்கை திருடி 20 லட்சம் ஏமாற்ற முயன்றார் என்று தன்னுடைய மேனேஜர் மூலம் (பாபியின் பினாமி தயாரிப்பாளர் இவர்) காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். பாபி சிம்ஹாடம் கொடுத்த பணத்திற்கு முறையான ஆதாரமும், நகை அடகு சீட்டுகளையும் காட்டி, சிறைக்குப்போகாமல் தப்பித்திருக்கிறார் செந்தில்குமரன்.
இதற்கிடையில் வல்லவனுக்கு வல்லவன் படத்தை தேனாண்டாள் நிறுவனம் மூன்றரை கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. பாபி சிம்ஹா தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் வல்லவனுக்கும் வல்லவன் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கோர்ட்டுக்குப்போக இருக்கிறாராம் செந்தில்குமரன். இவரிடம் உரிய ஆதாரங்கள் இருப்பதால் வல்லவனுக்கும் வல்லவன் படத்துக்கு தடை உறுதி என்று நம்பிக்கையில் இருக்கிறார்.