டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோகுலம், நாட்டாமை, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, அம்மன் கோவில் வாசலிலே, சுந்தர புருஷன், செல்வா, உன்னை நினைத்து உள்பட 70 படங்களுக்கு மேல் இசை அமைத்திருப்பவர் சிற்பி. இவரது மகன் நந்தன் ராம் பள்ளி பருவத்திலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார்.
வி.கே.பி.டி கிரியேஷன் சார்பில் டி.வேலு தயாரிக்கும் இந்தப் படத்தை வாசுதேவ் பாஸ்கர் இயக்குகிறார். வேதா, மறுபடியும் காதல் படத்தை இயக்கியவர் இவர். நந்தன் ராம் ஜோடியாக வெண்பா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் கற்றது தமிழ் உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர்கள் தவிர கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு, சுஜாதா, வேல்முருகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். வினோத்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜாவின் உதவியாளர் விஜய் நாராயணன் இசை அமைக்கிறார்.
"நிஜ சம்பவங்களின் தொகுப்பே கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள ஆம்பளாபட்டு என்ற கிராமத்தில் நான் படித்த பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானது. அந்த பள்ளியில் படித்த நிறைய பேர் இன்று டாக்டர்கள், வக்கீல்,ஆடிட்டர், தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். அப்படி உருவாகக் காரணமான ஆசிரியர் சாரங்கன் அவர்களின் கதாப்பாத்திரத்தை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருக்கிறார். அதே மாதிரி ஊர்வசி கதாப்பாத்திரமும் ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெரும். பள்ளி பருவத்திலே வில்லேஜ் காமெடி படமாக உருவாகிறது" என்றார் இயக்குனர் வாசுதேவ்பாஸ்கர்.