டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மீதான 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட், இன்று உறுதி செய்தது. பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.
இதுப்பற்றி தீர்ப்பு வருவதற்கு முன்னதாக காலையில் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல், ‛‛மெரினா உத்வேகம் தீர்ப்பை எதிர்பார்த்து அமைதியாக காத்திருக்கிறது. அவர்கள் எப்பொழுதுமே சட்டம் ஒழுங்கை மதிப்பவர்கள். நீதிமன்றங்களுக்கு கடமை உள்ளது மற்றும் மக்களுக்கும்'' என்று கூறியிருந்தார்.
தீர்ப்பிக்கு பின்னர் கமல் தனது டுவீட்டில், ‛‛பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..'' என்று கூறியிருக்கிறார்.