பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
துல்கர் சல்மானை வைத்து பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்த 'பிரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரனை விட ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் அதிக நேரம் வந்துபோவதாலும், அவரின் நடிப்பு மலையாள ரசிகர்களை கவர்ந்துள்ளதாலும் படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா.
இதை தொடர்ந்து அவர் நடித்துள்ள இன்னொரு மலையாள படம் தான் 'சகாவு'.. இளம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்து வரும் மலையாள சினிமாவின் இளம் நாயகன் நிவின்பாலி தான் கதாநாயகன். படத்தில் காயத்ரி சுரேஷ், அபர்ணா கோபிநாத் என இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் தனக்கு அதிகம் நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர் என்பதால் தெம்பாக இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அது மட்டுமல்ல புலிக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருக்கலாம் என்கிற விதமாக தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாநாயகர்களுடன் மட்டுமே நடித்து வரும் தனக்கு மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்து வருவதால், தனது கவனத்தை முழுமையாக மலையாள சினிமா பக்கம் திருப்ப முடிவு செய்துள்ளாராம். ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால் விரைவில் வெளிவர இருக்கும் 'சகாவு' படத்தையும் அதன் ரிசல்ட்டையும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.