இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல கன்னட நடிகை நிவேதிதா. தமிழில் போர்களம், கதை, மார்கண்டேயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள நிவேதிதா டிசம்பர்-1 என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார்.
கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிவேதிதா. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையை கொண்டாட கோவா சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் மற்ற தனது நண்பர்களுக்காக அங்கு காத்திருந்திருக்கிறார். அப்போது இரவு 9 மணியளவில் கோவா கடற்கரையை சுற்றிப் பார்த்து திரும்பியிருக்கிறார். அப்போது போதையில் வந்த சில இளைஞர்கள் நிவேதிதாவை தவறான பெண் என்று கருதி அழைத்துள்ளனர். அவரது கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிவேதிதா அங்குள்ள சிறிய ஓட்டலுக்குள் சென்றுள்ளார். அது ஒரு பார் அங்கும் குடிபோதையில் பலர் அமர்ந்திருந்தார்கள். அவர்களும் நிவேதிதாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்தும் தப்பி அறைக்கு திரும்பிய மறுநாளே பெங்களூர் வந்து விட்டார். கோவாவில் தனக்கு நேர்ந்த கொடுமையை இப்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார் நிவேதிதா.