டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மும்பை மாடலாக தன் கேரியரை தொடர்ந்தவர் குஜராத்தைச் சேர்ந்த பிரியல் கோர். வெற்றிகரமான மாடலாக வலம் வந்தவர் 2010ம் ஆண்டில் இஷான் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். இப்போது இந்தி சின்னத்திரை உலகின் முன்னணி நாயகி. இதுவரை 10 பிரமாண்ட தொடர்களில் நடித்தவர். தற்போது இச்சாபியாரி நாகினி என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜஸ்ட் யூ அண்ட் மீ என்ற பஞ்சாபி படத்திலும், சாபே சுப்ரமண்யம் என்ற தெலுங்கு படத்திலும், அனார்கலி என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் இந்தியில் நடித்து வரும் இச்சாபியார் நாகினி பாலிமர் தொலைக்காட்சியில் பிரியமுடன் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் பிரியல் கோர் நாகினியாக நடிக்கிறார்.
காமெடி மற்றும் திகில் கதையாக இந்த தொடர் நகர்கிறது. மந்திரவாதியும், நாகினியும் தற்போது நேருக்கு நேர் மோதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். நாகினியாக நடிக்கும் பிரியல்கோரின் அழகுக்கும், நடிப்புக்குமாகவே பெண்கள் டி.வி.முன் உட்காருகிறார்கள். விரைவில் தமிழ் சினிமாக்களிலும் பிரியல் கோரை பார்க்கலாம் என்கிறது சேனல் வட்டாரம்.