ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. அந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் வடிவேலு. அதையடுத்து தான் சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு நடிக்க வந்தபோது,அந்த படத்தில்தான் வடிவேலு நடிக்க நினைத்தார். ஆனால், அந்த பட்ஜெட் டில் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அப்பட வேலைகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கத்திச்சண்டை, சிவலிங்கா படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய்யுடன் 61-வது படத்தில் நடித்து வரும் வடிவேலு தற்போது இம்சை அரசனில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
அதோடு, கதை முதல் பாகத்தை விடவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால், கடந்த ஒரு வாரகாலமாக டைரக்டர் சிம்புதேவனை அழைத்து சீன் பை சீன் கதை விவாதம் நடத்தி வருகிறாராம் வடிவேலு. ஏற்கனவே இந்த கதையை வடிவேலுவிடம் சொல்லப்பட்டதுதான் என்றபோதும் இப்போது இன்னும் கதையில் கூடுதல் வலு சேர்க்க வேண்டும் என்பதால் திரும்பவும் கேட்டு வருகிறாராம். ஆக, இன்னும் ஓரிரு மாதங்களில் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்புதேவன் தொடங்கி விடுவார் என்று தெரிகிறது.