அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
1986-ல் நிலவே மலரே படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரகுமான். தொடர்ந்து அன்புள்ள அப்பா, புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம், கல்கி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர், ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததும் வில்லன் உள்ளிட்ட பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் கமர்சியல் வட்டத்தை விட்டு வெளியே சென்றுவிட்ட அவரை, கோலிவுட் இயக்குனர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த நேரத்தில்தான், சிங்கம்-2, 36 வயதினிலே, குற்றமே தண்டனை, துருவங்கள் பதினாறு வருடங்களில் நடித்தார். இதில் துருவங்கள் பதினாறு சூப்பர் ஹிட் படமானதால், தற்போது பகடி ஆட்டம் என்ற படத்தில் நடிக்கிறார் ரகுமான். இந்தநிலையில், அதோடு, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண் டும் மார்க்கெட்டில் நிலைத்து விட வேண்டும் என்று நினைக்கும் ரகுமான், தன்னைத்தேடி வரும் இளவட்ட டைரக்டர்களிடம் கதை கேட்கும் படலத்தை தொடங்கியிருக்கிறார்.
மேலும், கதை, கதாபாத்திரம் விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் ரகுமான், முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் தன்னை நடிக்க கேட்டால் மறுபரிசீலனை இன்றி மறுத்து விடுபவர், கதைக்கு முக்கியத்துமுள்ள வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கண்டிசனாக கூறிவருகிறார்.