வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
முதன் முறையாக மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன். தியானிக்க அல்ல. ஜீரணிக்க! மரணத்தின் மர்மம், மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மவுனத்தின் மாமர்மம், அரசியல் அதர்மங்கள், ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள், ரிமோட்டாய் கோடிகள், நடப்பவை நடந்தவை. விளங்காமல் கலங்கரை விளக்கத்தில் இருந்து நடந்து சென்றேன். கட்சிகளின் கல்மிஷங்கள் இல்லாத எம்.ஜி.ஆரின் விசுவாசிகள், அ.தி.மு.க. தொண்டர்கள், அறியா பொது ஜனங்கள் அணையா தீபங்களாய் அங்கே ஒளியூட்டல்.
'அம்மா' என்றழைக்கப்பட்டவரின் ஆன்மா என்ன நினைக்கும்? எனக்கும், அவருக்குமான சில சந்திப்புகளும், சம்பாஷனைகளும் வந்து போயின நினைவில். நம்பிக்கை துரோகமும், துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கவில்லை. சசிகலாவோ, ஓ.பி.எஸ்.சோ ஆட்சியமைப்பது சட்டபூர்வமே. ஆகையால் சட்டு புட்டுன்னு சட்டசபைக்கு வந்து மக்கள் பணி பாருங்கள். எம்மக்கள் திருந்தி விட்டார்கள். மறுதேர்தலை சந்திக்க வாருங்கள். நோட்டுக்காக அல்ல. நாட்டுக்காகவே ஓட்டு. இவ்வாறு பார்த்திபன் எழுதியிருக்கிறார்.