துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் "தற்போதுள்ள சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர். அவரே முதல்வராக தொடர வேண்டும்" என்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் அ.தி.மு.க. என்ற பேரியக்கம், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு பல்வேறு வழிகளில் உழைத்த இயக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், பொறுப்பேற்ற முதல் நாள் முதல் உண்மையாக தமிழரின் நலனுக்காக உழைத்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதை அறிந்து வேதனைக்கு உள்ளானேன் .