பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துப்புகழ் பெற்ற நடிகை நம்ரதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நம்ரதாவும் திருமணத்திற்கு பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகி விட்டார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் அஞ்சி படமே நம்ரதாவின் கடைசி படமாக அமைந்தது. இந்நிலையில் நம்ரதா மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருந்தது. இதனை நம்ரதாவும் உறுதி செய்துள்ளார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நம்ரதா தான் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாகக் கூறினார். ஆனால் அந்த திரைப்படம் குறித்த விபரம் எதையும் அவர் வெளியிடவில்லை. நம்ரதா தனது கணவர் மகேஷ் பாபுவின் படங்களில் தயாரிப்பு பணிகளை மேற்பார்வையிடும் பணியினை வழக்கமாக செய்து வருகின்றார். மகேஷ் பாபு தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகின்றார். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகின்றது.