டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்தி விட்டார். இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவின் 100வது படமாக வெளிவந்த கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படம் ரூ 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இப்படத்திற்கு ரூ 7 கோடி சம்பளம் வாங்கிய பாலகிருஷ்ணா, தனது சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்தி விட்டாராம். பாலகிருஷ்ணா தனது தந்தையான பழம்பெரும் நடிகர் என்.டி.ராமா ராவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக கூறினார். இது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இயக்குனர்கள் பூரி ஜெகன்நாத், கிருஷ்ண வம்சி, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.வி.கிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட இயக்குனர்கள் பாலகிருஷ்ணாவிடம் கதை கூறியுள்ளனர். இவர்களில் யாரை பாலகிருஷ்ணா தேர்வு செய்துள்ளார் என்பதை விரைவில் அவர் அறிவிப்பார்.