இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜயவாடா ஆந்திராவில் நடக்கும், தேசிய பெண்கள் பார்லிமென்ட் நிகழ்ச்சியில் பங்கேற்கவிடாமல், போலீசார் தடுத்து நிறுத்தியதாக, நடிகையும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வுமான, ரோஜா, புகார் கூறியுள்ளார்.அனுமதிக்கவில்லை .ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர்., காங்., - எம்.எல்.ஏ.,வாக, நடிகை ரோஜா இருந்து வருகிறார்; சட்டசபையில் அத்துமீறி நடந்ததாகக் கூறி, சமீபத்தில், அவர் சட்டசபை கூட்டத் தொடரில் இருந்து, சஸ்பெண்ட் . செய்யப்பட்டார்.
இந்நிலையில், விஜயவாடாவில், தேசிய பெண்கள் பார்லிமென்ட் எனப்படும், மூன்று நாள் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம், விஜயவாடா வந்த ரோஜாவை, போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ரோஜா கூறியதாவது: புத்த மத துறவி, தலாய்லாமா வருவதால், பாதுகாப்பு காரணங்கள் என கூறி, விமான நிலையத்தில், போலீசார் என்னை தடுத்து நிறுத்தினர். பெண் எம்.எல்.ஏ.,வான என்னை, தேசிய பெண்கள் பார்லிமென்ட் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். ஆனால், அவரது குற்றச்சாட்டை ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மறுத்து உள்ளது. குற்றச்சாட்டு இதுகுறித்து, அந்த கட்சியின் மூத்த தலைவர், ஷோபா ஹேமாவதி கூறுகையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த பெண், எம்.எல்.ஏ.,க்கள் பலர், நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ரோஜா, நிகழ்ச்சியில் பங்கேற்பதை விட, தகராறு செய்யவே விரும்புகிறார். அதனால், தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார், என்றார்.