தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டு மக்கள் அரசியலில் பல அதிரடியான திருப்பங்களை நேரடியாகப் பார்த்து வருவது திரையுலகத்திலும் எதிரொலித்தது. கடந்த மாதம் பொங்கல் தினத்திலிருந்தே தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை என்பதே உண்மை. 'பைரவா' படத்திற்குக் கூட பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டுமே வசூல் இருந்தது. அதன் பின் அப்படியே குறைந்துவிட்டது.
இப்போது 'சி 3' படமும் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையே இதற்குக் காரணம் என்றே கோலிவுட்டில் உள்ள பலரும் சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு திருப்புமுனைச் செய்தி என்றால் பரவாயில்லை. நிமிடத்திற்கு நிமிடம் திருப்புமுனை என்பது சினிமாவில் உள்ள திரைக்கதையைக் காட்டிலும் அதிகமாக உள்ளதால்தான் தியேட்டர்களில் இந்த நிலைமை என்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான 'சி 3' படம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என அனைத்து மாநிலங்களையும் சேர்த்து முதல் நாளில் சுமார் 17 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். சூர்யாவின் முந்தைய படங்களின் வசூலை 'சி 3' முறியடிக்கும் என பட வெளியீட்டிற்கு முன் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ்நாட்டில் 9 கோடி, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 5 கோடி, கேரளா கர்நாடகா மற்ற மாநிலங்களைச் சேர்த்து 3 கோடி வரை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
அதேசமயம், படத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக இருக்கிறது என ரசிகர்களிடமிருந்து கருத்துக்கள் வருவதால் இன்றும் நாளையும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.