ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் திரைக்கு வந்த படங்களில் மிகப் பெரிய பாராட்டுக்களுடன் மட்டுமின்றி நல்ல வசூலுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'துருவங்கள் பதினாறு'. இந்த படத்தை கோவையைச் சேர்ந்த கார்த்திக் நரேன் என்ற இனளைஞர் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்கும் புதிய படத்திற்கு 'நரகாசூரன்' என்று டைட்டில் வைத்திருக்கிறார் கார்த்திக் நரேன். இந்த படத்தில் நடிக்க அர்விந்த்சாமியை அணுகியபோது அவர் அதிக சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது.
இப்போது இந்த படத்தின் புதிய தகவலாக இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகை சேர்ந்த மூன்று ஹீரோக்கள் நடிக்க இருக்கிறார்கள் என்றும் இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் அடிபடுகின்றன. துருவங்கள் பதினாறு படத்தை வெளியிட்ட ட்ரீம்ஃபேக்டரி நிறுவனம் கௌதம் மேனன் உடன் இணைய வேண்டாம் அடுத்த படத்தை நாம் இணைந்து பண்ணலாம் என்று கார்த்திக் நரேனிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த குழப்பம் காரணமாக தன்னுடைய அடுத்தப்படம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் கார்த்திக் நரேன். இன்னொரு பக்கம், 'துருவங்கள் பதினாறு' திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீ-மேக் செய்து இயக்கவும் கார்த்திக் நரேனுக்கு நிறைய அழைப்புகள் வருகிறது என்றும் ஆனால் இப்போதைக்கு 'துருவங்கள் பதினாறு' படத்தை வேறு மொழியில் ரீ-மேக் செய்து இயக்கும் எண்ணம் கார்த்திக் நரேனுக்கு இல்லை என்றும் அவர் தரப்பில் சொல்கின்றனர்.