'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் கோவிந்தாவும் ஒருவர். இயக்குநர் தீபங்கர் சேனாபதி இயக்கத்தில் கோவிந்தா தற்போது நடித்துள்ள படம் ‛ஆ கயா ஹீரோ'. மார்ச் 3ம் தேதி படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார் கோவிந்தா. சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவிந்தா, இயக்குநர் கரண் ஜோகர் மிகவும் ஆபத்தானவர் என்று கூறியுள்ளார்.
இதைப்பற்றி கோவிந்தா மேலும் கூறியதாவது... "கடந்த 30 வருடங்களில் கரண் எனக்கு ஒருபோன் கூட பண்ணியது கிடையாது. படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் தவிர எந்த நடிகருக்கும் அவர் ஒரு ஹலோ கூட சொன்னதில்லை. அவரின் இதயம் சுருங்கிவிட்டது. மிகவும் குறுகிய எண்ணம் உடையவர், பார்க்கத்தான் மற்றவர்களுடன் சகஜகமாக பழகுவது போன்று தெரியும், ஆனால் மிகவும் ஆபத்தானவர்'' என்று கூறியுள்ளார்.