'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ரா ரா, சந்தமாமா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு. தமிழ் தவிர்த்து ஹிந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் தொழில் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது சந்திர நந்தினி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இதுதவிர சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ஸ்வேதா, ‛பத்ரிநாத் கி துல்கன்யா' என்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார். வருண் தவான், ஆலியா பட் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சஷாங் கைத்தான் இயக்குகிறார்.
இப்படம் பற்றி நடிகை ஸ்வேதா பாசு கூறியிருப்பதாவது... ‛‛இந்தப்படத்தில் எனது கேரக்டர் முற்றிலும் மாறுப்பட்டது. என்னை குழந்தையாக மக்தே, இக்பால் படங்களில் பார்த்திருப்பீர்கள், அதன்பின்னர், கிளாமர் ரோலில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது இதுவரை என்னை பார்த்திராத ஒரு ரோலில் பார்க்க உள்ளீர்கள். படத்தில் ஊர்மிளா என்ற ரோலில் வருணின் அண்ணன் மனைவியாக, அடக்கமான பெண்ணாக நடித்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.