ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் |
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். பட்டத்துயானை படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானார். பூபதி பாண்டியன் படத்தை இயக்கினார். ஆனால் ஐஸ்வர்யாவின் அறிமுக படம் வெற்றிப் படமாக அமையவில்லை. இதனால் ஐஸ்வர்யாவுக்கு எதிர்பார்த்த அளவிற்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அப்பா தயாரித்து இயக்கிய ஜெய்ஹிந்த் இரண்டாம் பாகத்தின் இணை தயாரிப்பாளராக இருந்தார் ஐஸ்வர்யா.
என்றாலும் ஐஸ்வர்யாவுக்கு சினிமாவில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற உறுதி. மகளின் ஆசையை நிறைவேற்ற தானே ஒரு படத்தை தயாரித்து இயக்க முடிவு செய்தார் அர்ஜுன். மகளுக்காகவே ஒரு காதல் கதையை உருவாக்கினார். தேசப்பற்று மிக்க ஆக்ஷ்ன் படங்களை இயக்கிய அர்ஜுன் மகளுக்காக ஒரு காதல் படம் இயக்க முன்வந்தார். காதலின் பொன் வீதியில் என்று கவித்துவமான தலைப்பும் வைத்தார்.
தமிழ், கன்னடம் இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ஜோடியாக சந்தன் குமார் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் சுஹாசினி, கே.விஸ்வநாத் ஆகியோரும் நடிக்கிறார்கள். இது காதல் படமாக இருந்தாலும் அர்ஜுன் பாணியிலான ஆக்ஷ்னும் இருக்கிறது. ஹீரோ, ஹீரோயின் இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறவர்கள். ஒரு யுத்த சூழ்நிலையில் இருவருக்கும் காதல் உருவாகிறது. நாட்டிற்காக போராடிக் கொண்டே எப்படி தங்கள் காதலிலும் ஜெயிக்கிறார்கள் என்கிற கதை என்று கூறப்படுகிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட், தேசப்பற்று எல்லாவற்றையும் கலந்து மகளுக்காக படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் அர்ஜுன். இதன் பர்ஸ்ட்லுக் மோசன் போஸ்டரை நேற்று சூர்யா வெளியிட்டார். விரைவில் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த இருக்கிறா£ அர்ஜுன்.