பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்றோர்களுடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாக நாகார்ஜூனா தெரிவித்துள்ளார். நாகார்ஜூனா நடிப்பில் வெளிவந்துள்ள ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தின் புரமோஷனின் போது சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து நடிக்க நீங்கள் தயாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நாகார்ஜூனா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க தயக்கம் எதுவும் இல்லை என்று கூறிய நாகார்ஜூனா, அவ்வாறு திரைக்கதை அமையும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூறினார். தெலுங்கில் ஊபிரி என்ற பெயரிலும் தமிழில் தோழா என்றும் திரைக்கு வந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து நாகார்ஜூனா கை கால் செயலிழந்தவராக நடித்திருந்தார். இப்படம் விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது