மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
நூறு சதவீதம் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தரும் படங்களை இயக்குபவர் பிரபல மலையாள இயக்குனர் சித்திக். அப்படிப்பட்ட சித்திக்குடன் மெகாஸ்டார் மம்முட்டி இணைந்துவிட்டால் அந்தப்படம் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்றாக மாறிவிடும். ஏற்கனவே மம்முட்டியை வைத்து சித்திக் இயக்கிய, 'ஹிட்லர்', 'குரோனிக்கல் பேச்சிலர்', 'பாஸ்கர் தி ராஸ்கல்' படங்களில் இந்த கூட்டணி நிகழ்த்திய மேஜிக் நாடறிந்த விஷயம்.
மம்முட்டியின் தொழில் பக்தியும் சிரத்தையும் குறித்து தனது கண்ணோட்டத்தில் குறிப்பிட்டுள்ளார் சித்திக். மம்முட்டியை பொறுத்தவரை ஸ்பாட்டில் கேமரா முன் நிற்கும்போது 100 சதவீத பர்பெக்ஷனை தருவார். அதேசமயம், அந்தப்படத்தின் டப்பிங்கின்போது 110 சதவீதம் இன்னும் அதிக பெர்பெக்ஷன் கொடுத்து தனது கேரக்டரையும் மேருகேற்றுவார்கள். ஆனால் மற்ற நடிகர்களை பொறுத்தவரை கேமரா முன் நடிப்பில் காட்டும் சிரத்தையை டப்பிங்கில் காட்ட தவறிவிடுகிறார்கள் என்பதே சித்திக்கின் கருத்தாக இருக்கிறது.