இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தனியாக ஒரு அரசியல் கட்சியை துவக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா...? என்று பல ஆண்டுகளாகவே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. அவரும் அரசியலுக்கு வந்துவிட மாட்டாரா...? என்று அவரது ரசிகர்களும் ஆவலாய் காத்து கிடக்கின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, தமிழகம் முழுவதும் உள்ள, அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தன் அரசியல் பயணம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், கராத்தே தியாகராஜன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட, மூத்த பத்திரிகையாளர்களிடம், ரஜினி முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்எஸ்எஸின் முக்கிய பிரமுகரும், மறைந்த சோவின் நெருங்கிய நண்பருமான குருமூர்த்தியுடன் துணையுடன் அவர் அரசியலில் களம் காண இருப்பதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.