‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தற்போதைய சூழலில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியானது என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆளும்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசலால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியை யார் கைப்பற்ற போவது சசிகலாவா அல்லது முதல்வர் ஓ.பன்னீர் செல்வமா என்ற கேள்விக்கு விரைவில் விடை தெரிய வர உள்ளது. இந்நிலையில், தமிழக அரசியல் குறித்து திரைபிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அரவிந்த்சாமியும் தமிழக அரசியல் குறித்து தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛எம்.எல்.ஏ.க்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது, தனிமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படி இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி சரியான தீர்வாக அமையும்? ஆகவே, ஜனாதிபதி ஆட்சி அல்லது மறு தேர்தலே சரியான தீர்வாக அமையும்'' என்று கூறியுள்ளார்.