'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஓகே கண்மணி படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை. மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னமே தயாரிக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. கார்த்தி, அதிதிராவ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருக்மணி விஜயகுமார், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாகி வருகிறது. கார்த்தி ராணுவ பைலட்டாக நடிக்கிறார். இதனால் இது ராணுவம், தீவிரவாதம், இந்தியா பாகிஸ்தான் போர் உள்ளடக்கிய ஆக்ஷன் படம் என்று பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது 100 சதவிகித காதல் படம்.
அழகான காதல் கதையை காஷ்மீர் மற்றும் ராணுவத்தின் பின்னணியில் சொல்கிறார் மணிரத்னம். தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்தி ராணுவ விமான பைலட்டாக வேலை செய்கிறார். இவர் வேலை செய்யும் இடத்திலேயே டாக்டராக வேலை செய்கிறார் அதிதிராவ். இருவருக்கும் இடையில் உருவாகும் காதலுக்கு ராணுவ கட்டுப்பாடும், காஷ்மீர் வாழ்க்கை சூழலுமே எதிரியாக இருக்கிறது. அவற்றை வென்று எப்படி காதலில் ஜெயிக்கிறார்கள் என்கிற கதை.
இந்திய ராணுவத்தின் பெருமையையும், காதலின் பெருமையையும் ஒரு சேர பேசுகிறது படம். வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வாழ்வதை அலைபாயுதேவில் சொன்னார், லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை ஓகே கண்மணியில் சொன்னார். அதேபோல இதிலும் ஒரு அதிர்ச்சியான விஷயம் இருக்கிறது அது சஸ்பென்ஸ்.