'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
சூர்யா நடித்துள்ள சி3 படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இதன் புரமோசனுக்காக தமிழ்நாட்டில் வலம் வந்த சூர்யா இப்போது உலக டூர் கிளம்பியிருக்கிறார். நேற்று துபாய் சென்ற அவர் இரவு 7 மணி காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சிங்கம் படத்தின் முதல் இரு பாகங்களும் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு வேறு படம் நடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் சிங்கம்-3-க்கான நல்ல கதை களம் அமைந்ததால் நானும், ஹரியும் மீண்டும் சிங்கம்3-ல் இணைந்திருக்கிறோம். தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய மைல் கல். சி3 படமும் வெற்றி பெற்றிருப்பதாக பல்வேறு இடங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இது போலீசை உயர்த்தி பிடிக்கும் படம் தான். இயக்குனர் ஹரிக்கு போலீசில் சேரும் ஆர்வம் இருந்தது. அது நிறைவேறாததால் தனது ஆசையை சினிமா மூலம் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு சில போலீஸ் தவறாக நடந்திருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த போலீசையும் தவறாக சித்தரிப்பது வருத்தமாக உள்ளது. போலீசாரும் உணர்வுடன் போராட்டத்தில் சீருடையை மாற்றி கலந்து கொண்டதையும் நாம் பார்த்தோம்.
தமிழ்நாட்டில் நடந்து வரும் அரசியல் சூழ்நிலையை நானும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். விரைவில் நல்லாட்சி அமையும் என்று நம்புகிறேன். தற்போது அகரம் அறக்கட்டளை சார்பில் கருவேல மரங்களை அகற்றி வருகிறோம். இதன் மூலம் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறோம் என்றார்.