தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கயல் ஆனந்தி நடிக்கும் புதிய படத்திற்கு என் ஆளோட செருப்பக் காணோம் என்ற டைட்டில் வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இந்த அளவிற்க டைட்டில் பஞ்சம் நிலவும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விஜய் நடித்த புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை இயக்கிய ஜெகன்நாத் இயக்குகிறார். இவர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார்.
புதுமுக நடிகருடன் கயல் ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் தவிர ரேகா, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, பால சரவணன், லிவிங்ஸ்டன். ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சுக.செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். இஷான் தேவ் இசை அமைக்கிறார். எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார்.
"ஹீரோயின் ஆனந்தி தன் ஒரு ஜோடி செருப்புகளை தொலைத்து விடுகிறார். ஒரு அடை மழை காலத்தில் அது தொலைந்து விடுகிறது. அந்த செருப்பு மிகவும் விலை குறைவானதுதான். ஆனால் ஒரு வகையில் அது அவளுக்கு மிக முக்கியமானது. காதலி தொலைத்த செருப்பைத் தேடி காதலன் குடையுடன் செல்கிறான். செருப்பு கிடைத்ததுதா? காதல் கைகூடியதா? அந்த செருப்பில் அப்படி என்னதான் சிறப்பு என்பது பற்றிய கதை. 30 நாளில் நடக்கிற கதை. மனிதன் உடலோடு ஒட்டிய செருப்பு மனிதனோடு எந்த அளவிற்கு பின்னி பிணைந்திருக்கிறது என்பதை சுவாரஸ்யத்தோடு சொல்கிறேன்" என்கிறார் இயக்குனர் ஜெகன்நாத்.