விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ராஜ்கிரண், விமல், லட்சுமிமேனன் நடித்த மஞ்சப்பை படத்தை இயக்கியவர் ராகவா. அதையடுத்து தற்போது ஆர்யா-கேத்ரின் தெரசா நடிப்பில் கடம்பன் படத்தை இயக்கியுள்ளார். பாங்காங் நாட்டு காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த அப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
கடம்பன் படம் குறித்து இயக்குனர் ராகவா கூறுகையில், இந்த படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கை பிரச்சினையை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. 70 யானைகள் இந்த படத்தில் நடித்துள்ளன. அதற்காக இந்த படம் யானைகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகவில்லை. இது முழுக்க முழுக்க பழங்குடியின மக்களின் பிரச்சினையை சொல்லும் படம்.
இந்த கதைக்குள் எப்படி யானை வந்தது? என்று கேட்டால், பழங்குடியின மக்களுக்கும், காட்டு மிருகங்களுக்குமிடையே ஒரு உறவு இருக்கிறது. பழங்குடியின மக்களை மிருகங்கள் எதிரிகளாக நினைப்பதில்லை. அதன்காரணமாகத்தான் இந்த கதையில் யானைகளும் பங்கு வகிக்கின்றன. அடர்ந்த அழகியலான பாங்காங் நாட்டு காட்டுப்பகுதிகளில் கடம்பன் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த படத்திற்காக ஆர்யா ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். அவருடன் கேத்ரின் தெரசா, ஒய்.ஜி.மகேந்திரா, சூப்பர் சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ் என ஒவ்வொரு கேரக்டர்களுமே சிறப்பாக நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் கடம்பன் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் திரைக்கு வரும் இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமையும் என்பது உறுதி என்கிறார் இயக்குனர் ராகவா.