இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளில் சைப் அலிகான் - கரீனா கபூரும் முக்கியமானவர்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 தேதி நடிகை கரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பெயர் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கரீனா, தனது மகனுக்கு தான் கொடுக்கும் அட்வைஸ் பற்றி பேசியிருக்கிறார்.
இதுப்பற்றி கரீனா கூறியதாவது... "என் மகன் தைமூருக்கு அடக்கமாக இருக்க கற்று தருவேன். அதில், நான் கவனமாக இருப்பேன். அவனுக்கு பிடித்ததை பயப்படாமல் செய்யலாம். நானும் என் கணவரும் சினிமா பிரபலமாக இருந்தாலும் அனைவரிடத்திலும் பழகத்தான் வேண்டும், இந்த பூமியின் முன் நாம் அனைவரும் சமம், இதையும் என் மகனை கடைப்பிடிக்க அறிவுறுத்துவேன்" என்றார்.