'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலி சோடா படத்தை இயக்கி வெற்றிகண்ட ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அடுத்து விக்ரம் நடித்த பத்து எண்றதுக்குள்ள படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்ததால் விஜய்மில்டனுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஹீரோக்கள் பின்வாங்கினர். எனவே சின்ன பட்ஜெட்டில் டி.ராஜேந்தரை வைத்து ஒரு காமெடி படம் எடுக்க திட்டமிட்டார். ஆனால் சில காரணங்களால் அவர் ஒத்துவரவில்லை. இதனால் அவரை நீக்கிவிட்டு தேவயானியின் கணவரான ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து அந்தப் படத்தை தொடங்கினார்.
கடுகு என பெயரிடப்பட்ட இந்தப்படத்தை விஜய் மில்டனின் ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவையும் விஜய் மில்டனே கவனித்துள்ள கடுகு படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை அனூப் சீலின் என்பவர் அமைத்துள்ளார். கடுகு படம் ரெடியாகி பல மாதங்களாகியும் படம் பிசினஸ் ஆகவில்லை. அதனால் சொந்தமாக ரிலீஸ் செய்ய முயற்சி செய்தார் விஜய்மில்டன். ஆனால் தியேட்டர்காரர்கள் மத்தியில் கடுகு படத்துக்கு ஆதரவில்லை.
இந்நிலையில் நடிகர் சூர்யாவை சந்தித்து உதவி கேட்டிருக்கிறார் விஜய்மில்டன். அவருக்கு உதவும் எண்ணத்தில் இப்படத்தை தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தமிழகத்தில் வெளியிட முன் வந்திருக்கிறார் சூர்யா. இதுவரை 36 வயதினிலே, பசங்க 2, 24 ஆகிய படங்களை தயாரித்துள்ள 2டி என்டர்டெயின்மென்ட் தன்னுடைய படங்களையே மற்றவர்கள் மூலம்தான் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், முதல்முறையாக கடுகு படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.